sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விபத்தை ஏற்படுத்தும் கேபிள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

/

விபத்தை ஏற்படுத்தும் கேபிள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விபத்தை ஏற்படுத்தும் கேபிள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விபத்தை ஏற்படுத்தும் கேபிள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ADDED : மே 08, 2024 05:35 AM

Google News

ADDED : மே 08, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம : திருப்புவனம் நகரின் பல இடங்களில் தனியார் தொலை தொடர்பு கேபிள் ரோட்டில் கிடப்பதால் தினசரி பலரும் அதில் சிக்கி காயமடைகின்றனர்.

திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு கேபிள் மூலம் இணைப்பு வழங்கி வருகின்றன.

இது தவிர திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பாரத் பைபர் கேபிள் மூலம் சுற்று வட்டார கிராம ஊராட்சிகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இணைப்புகள் வழங்க ஆப்டிகல் பைபர் கேபிள்களை கொண்டு வந்து ஆங்காங்கே பாதுகாப்பின்றி வைத்துள்ளனர்.

பல இடங்களில் கேபிள்கள் 50 மீட்டர் தூரத்திற்கு ரோட்டில் சிதறி கிடக்கின்றன. நடந்து செல்பவர்கள், டூவீலர்களில் செல்பவர்கள் என பலரும் கேபிள்களில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். பலமுறை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் கேபிள்களை அப்புறப்படுத்த வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.

ரோட்டில் கேபிள் கிடப்பதால் பெண்களுடன் செல்லும் பலரும் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us