sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை நகராட்சியில் ஆய்வாளர் பணியிடம் காலியால் பணிகள் பாதிப்பு

/

மானாமதுரை நகராட்சியில் ஆய்வாளர் பணியிடம் காலியால் பணிகள் பாதிப்பு

மானாமதுரை நகராட்சியில் ஆய்வாளர் பணியிடம் காலியால் பணிகள் பாதிப்பு

மானாமதுரை நகராட்சியில் ஆய்வாளர் பணியிடம் காலியால் பணிகள் பாதிப்பு


ADDED : ஜூன் 22, 2024 05:14 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர், துாய்மைஆய்வாளர், பணித்தள மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பெரும்பாலான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

மானாமதுரை பேரூராட்சி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது 27 வார்டுகள் உள்ளன. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அனைத்து பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2வருடங்களாக நகரமைப்பு ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதால் மாற்றுப் பணியில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் வேறு நகராட்சியிலிருந்து இங்கு வந்து செல்கின்றனர்.

அதே போன்று துாய்மை பணியாளர் பணியிடம் காலியாக இருப்பதால் நகரில் துாய்மை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் பணித்தள மேற்பார்வையாளர் பணியிடமும் காலியாக இருப்பதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக மானாமதுரை நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களில் ஊழியர்களையும், அதிகாரிகளையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us