sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

லாரி மோதி 12 மாடுகள் சாவு 98 மாடுகள் தெறித்து ஓட்டம்

/

லாரி மோதி 12 மாடுகள் சாவு 98 மாடுகள் தெறித்து ஓட்டம்

லாரி மோதி 12 மாடுகள் சாவு 98 மாடுகள் தெறித்து ஓட்டம்

லாரி மோதி 12 மாடுகள் சாவு 98 மாடுகள் தெறித்து ஓட்டம்


ADDED : மே 18, 2025 04:37 AM

Google News

ADDED : மே 18, 2025 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில், திருப்புவனம் அருகே கிடை மாடுகள் கூட்டத்தின் மீது லாரி மோதியதில், 12 மாடுகள் உயிரிழந்தன.

அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்த, 98 மாடுகள் மாயமானதால், உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர்.

மதுரை, ஆண்டார்கொட்டாரத்தில் இருந்து அய்யனார் என்பவர், நேற்று முன்தினம் இரவு, சிவகங்கை மாவட்டம், பழையனுார் அருகே கிடாக்குழி கிராமத்தில் கிடை அமைக்க, 110 மாடுகளை ஓட்டிச் சென்றார்.

மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு சென்ற போது, மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி, கிடை மாடு கூட்டத்தில் புகுந்தது. இதில், 12 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

அதிர்ச்சியில், 98 மாடுகள் நாலாபுறமும் சிதறி ஓடின.

இருட்டில் மாடுகளை தேடி அய்யனார் உட்பட மாடுகளை ஓட்டி வந்தவர்கள் சென்றனர். உயிரிழந்த மாடுகள் சில சினையாக இருந்தன. புலிக்குளம் இன மாடுகளான இவை, 20,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை மதிப்புடையவை.

'சிதறி ஓடிய மாடுகளை பிடிக்க வாய்ப்பில்லை. காரணம், அவை கிடை மாடுகள் என்பதால் கழுத்தில் கயிறு இருக்காது. கூட்டமாக இருக்கும் வரை கட்டுப்பாடு இருக்கும். தனித்து விட்டால் அவற்றை பிடிக்க முடியாது' என, கதறுகின்றனர் உரிமையாளர்கள்.

விபத்து குறித்து, திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு தினங்களுக்கு முன், அரசு பஸ் மோதியதில், 16 மாடுகள் உயிரிழந்தன. தற்போது திருப்புவனத்தில், 12 மாடுகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us