/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேட்டங்குடிக்கு வந்தது 3000; பெருகியது 4200 'கீச்...கீச்...' சப்தத்துடன் சரணாலயம்
/
வேட்டங்குடிக்கு வந்தது 3000; பெருகியது 4200 'கீச்...கீச்...' சப்தத்துடன் சரணாலயம்
வேட்டங்குடிக்கு வந்தது 3000; பெருகியது 4200 'கீச்...கீச்...' சப்தத்துடன் சரணாலயம்
வேட்டங்குடிக்கு வந்தது 3000; பெருகியது 4200 'கீச்...கீச்...' சப்தத்துடன் சரணாலயம்
ADDED : நவ 08, 2024 02:26 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த 3,000 பறவைகள் இனப்பெருக்கத்திற்கு பின் 4,200 ஆக அதிகரித்துள்ளன.
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 40 எக்டேரில் உள்ளது. வடகிழக்கு பருவ மழை காலங்களில் பெய்யும் மழைநீர் வேட்டங்குடி, பெரிய, சின்ன கொள்ளுகுடிபட்டி ஆகிய 3 கண்மாய்களில் சேகரமாகும்.
இக்கண்மாய்களில் வளர்ந்துள்ள நாட்டு கருவேல் மரங்களில் கூடு கட்டி பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இதற்காக ஐரோப்பிய, வடக்கு ஆசிய நாடுகளில் இருந்து 217 வகைகளைச் சேர்ந்த ஏராளமான பறவைகள் இங்கு வருகின்றன. ஆண்டுதோறும் நவ.,ல் வந்து இனப்பெருக்கத்திற்கு பின் பிப்.,ல் குஞ்சுகளுடன் சொந்த நாட்டிற்கு பறந்து விடும்.
இப்பறவைகள் இடும் எச்சத்தால், நடவு செய்யும் நெற்பயிருக்கு இயற்கை உரம் கிடைப்பதுடன் பயிர்களை தாக்கும் புழு, பூச்சிகளையும் அழிப்பதால் பயிர்களை காக்கும் 'வெளிநாட்டு துாதுவராக' பறவைகளை விவசாயிகள் வரவேற்கின்றனர்.
இந்தாண்டு இனப்பெருக்கத்திற்காக பல்வேறு நாடுகளில் இருந்து 3,000 பறவைகள் வந்துள்ளன. இவை தற்போது மரங்களில் கூடு கட்டி, குஞ்சு பொரித்து வருகின்றன. இக்குஞ்சுகளும் தற்போது நன்கு வளர்ந்துள்ளன.
இதன் மூலம் சரணாலயத்தில் பறவைகள் எண்ணிக்கை 4,200 ஆக அதிகரித்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இங்கு உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்பு தாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை உட்பட 217 விதமான பறவைகள் வந்துள்ளன. இதனால் வேட்டங்குடி பறவைகள் சரணாலய ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.