sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; மாவட்டத்தில் நிரம்பி வழியும் 328 கண்மாய்கள்  

/

ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; மாவட்டத்தில் நிரம்பி வழியும் 328 கண்மாய்கள்  

ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; மாவட்டத்தில் நிரம்பி வழியும் 328 கண்மாய்கள்  

ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; மாவட்டத்தில் நிரம்பி வழியும் 328 கண்மாய்கள்  


ADDED : டிச 18, 2024 07:40 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து அனைத்து ஆறுகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 959 கண்மாய்களில் 328 கண்மாய்களில் மழை நீரால் நிரம்பி வழிகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாதங்களாக மேலாக கனமழை பெய்தது.

இதன் மூலம் சிவகங்கை மாவட்டம் வழியாக செல்லும் மணிமுத்தாறு, வைகை, கிருதுமால் நதி, பரளையாறு, உப்பாறு, நாட்டார் ஆறு, நாட்டார் கால்வாய், சருகணியாறு, கோட்டைகரையாறு, பாலாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆறுகளை நம்பியே பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 959 கண்மாய்களிலும் மழை நீர் சேகரமாகின்றன. இந்த கண்மாய் நீரினை நம்பியே விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.

நிரம்பி வழியுது 328 கண்மாய்கள்


மழை நீர் கண்மாய்களில் சேகரமாவதன் மூலம் நேற்றைய (டிச., 17) நிலவரப்படி 328 கண்மாய்கள் முழுவதும் நிரம்பி மறுகால் பாய்கின்றன. 344 கண்மாய்களில் 99 சதவீதமும், 184 கண்மாய்களில் 51 முதல் 75 சதவீதமும், 87 கண்மாய்களில் 26 முதல் 50 சதவீதம் வரை மழை நீர் சேகரமாகியுள்ளது.

மாவட்ட அளவில் 16 கண்மாய்களில் மட்டுமே 25 சதவீதம் வரை மழைநீர் சேகரமாகியுள்ளன. இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ள நீர் ஓடுவதால், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போன்று கண்மாய் நீரினை நம்பி நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் ஒரு போக நெல் அறுவடை செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் விவசாய பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆறுகளில் மழை நீர் வெள்ளம்போல் செல்வதால், ஏரியூர், குமாரபட்டி, சருகணி ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளில் உள்ள மதகணைகளில் மழை நீர் அருவி போல் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.






      Dinamalar
      Follow us