sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு ரூ.3.36 லட்சம் பறிமுதல்

/

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு ரூ.3.36 லட்சம் பறிமுதல்

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு ரூ.3.36 லட்சம் பறிமுதல்

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு ரூ.3.36 லட்சம் பறிமுதல்


ADDED : அக் 02, 2024 02:52 AM

Google News

ADDED : அக் 02, 2024 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்து கணக்கில் வராத ரூ.3.36 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்ற புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், எஸ்.ஐ., ராஜா முகமது மற்றும் போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு வந்திருந்த அரசு போக்குவரத்து கழகத்தில் முதுநிலை உதவியாளராக பணிபுரியும் ராமகிருஷ்ணனை சோதனையிட்டனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போக்குவரத்து அலுவலகத்திலுள்ள ஒரு டேபிளில் இருந்து ரூ.3 ஆயிரத்து 250 ஐ பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ராமகிருஷ்ணன் அரசு பஸ்களுக்கு பெர்மிட் எடுப்பதற்கும், வரி கட்டுவதற்கும் அடிக்கடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர் என்பது விசாரணையில் தெரிந்தது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us