ADDED : செப் 20, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுராஜ் பர்கவ் 20. இவர் காரைக்குடி அருகே ஆவடைபொய்கை திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை அருகே கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில், 4 பேர் ஜூஸ் குடித்துள்ளனர். அவர்களிடம், ஜூஸ் குடித்ததற்கு சுரஜ் பணம் கேட்டுள்ளார். அந்த 4 பேரும், பணத்தை கொடுக்காமல் அவரை தாக்கியதோடு அவரிடமிருந்து போனையும் பறித்துச் சென்றனர்.
எஸ்.ஐ., பழனிக்குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்டது மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த நாடிமுத்து அவரது சகோதரர் வெங்கடேஷ், நண்பர்கள் பாலச்சந்தர், முத்து மணி என தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.