sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆக்கிரமிப்பில் 48 காலனி வாரிய குடியிருப்பு நிலம்: அகற்ற கோரிக்கை

/

ஆக்கிரமிப்பில் 48 காலனி வாரிய குடியிருப்பு நிலம்: அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்பில் 48 காலனி வாரிய குடியிருப்பு நிலம்: அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்பில் 48 காலனி வாரிய குடியிருப்பு நிலம்: அகற்ற கோரிக்கை


ADDED : ஜூலை 29, 2025 12:43 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே 48 காலனியில் பழுதடைந்த அரசு குடியிருப்பு அகற்றப்பட்ட பின் நிலத்தை பாதுகாக்காததால் செடிகள் வளர்ர்ந்து ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

1970ம் ஆண்டு 2 ஏக்கரில் சிவகங்கையில் ஆயுதப்படை செல்லும் ரோட்டில் உள்ள 48 காலனியில் அரசு ஊழியர்களுக்கு 48 வீடுகள் கட்டப்பட்டது. 46 ஆண்டுகளான இந்தவீடுகளை வீட்டு வசதி வாரிய நிர்வாகத் தினர் பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.

காலப்போக்கில் வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து புதர் மண்டியது. வீடுகளை ஆய்வு செய்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினர் 2024ம் ஆண்டு அனைத்து வீடு களையும் அகற்றினர். வேலி எதுவும் இங்கு அமைக்காததால் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடத்திற்குள் கடைகள் வைத்து ஆக்கிரமிக்க துவங்கிவிட்டனர்.

நகராட்சி வார்டு கவுன்சிலர் சரவணன் (தி.மு.க.,): அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப் பாளர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அங்கு மீண்டும் குடி யிருப்பு கட்ட முடியாத பட்சத்தில், வேறு ஏதேனும் அரசு அலு வலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பொற்கொடி யிடம் மனு அளித்து உள்ளேன், என்றார்.






      Dinamalar
      Follow us