sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 பயணிகளை இன்முகத்துடன் வரவேற்கும் கண்டக்டர்

/

 பயணிகளை இன்முகத்துடன் வரவேற்கும் கண்டக்டர்

 பயணிகளை இன்முகத்துடன் வரவேற்கும் கண்டக்டர்

 பயணிகளை இன்முகத்துடன் வரவேற்கும் கண்டக்டர்


ADDED : நவ 13, 2025 02:38 AM

Google News

ADDED : நவ 13, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியிலிருந்து மதுரை செல்லும் அரசு பஸ்சில் பயணிகளை இன் முகத்துடன் கைகூப்பி வரவேற்கும் கண்டக்டர் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

பஸ்சில் ஏறினாலே, சில்லறை எடுத்து வச்சுக்கோ. சில்லறை இல்லாத ஆளு கீழே இறங்கு என்ற வசனங்களை தான் நாம் கேட்டிருப்போம். கண்டக்டர் வரும் வரை பதட்டத்துடனேயே இருக்க வேண்டியிருக்கும்.

அதை மாற்றி பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளார் கண்டக்டர் நவநீதகிருஷ்ணன்.

காரைக்குடி- மதுரை பஸ்சில் கண்டக்டராக இருக்கும் இவர் பயணிகளை கைகூப்பி வணங்கி, இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைவரையும் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன், என்று வரவேற்கிறார்.

தொடர்ந்து பஸ் நிறுத்தங்கள், பஸ் கட்டணங்கள் குறித்து கூறிவிட்டு, டிஜிட்டல் பேமென்ட் குறித்தும் எளிதாக பணப்பரிவர்த்தனை குறித்தும் பயணிகளிடம் விளக்கம் அளிக்கிறார்.

கண்டக்டர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், பயணிகள் பலவித சிந்தனைகளில் பஸ்சில் ஏறுவார்கள். அதே சிந்தனையில் அவர்கள் பயணம் செய்வதை மாற்றி அவர்களின் எதிர்மறையான எண்ணங்களை கூட எனது பேச்சால் நேர்மறையாக மாற்றுகிறேன். இதனால் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் தேவையில்லாமல் ஏற்படும் வாக்குவாதம் குறையும். பயணிகளே தாமாக முன்வந்து சில்லறை கொடுப்பார்கள். இதை நான் பணிக்கான சேவையாக செய்கிறேன்.






      Dinamalar
      Follow us