ADDED : நவ 02, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள அமராவதிப் புதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் குணசேகரன் 54. இவர் நேற்று காலை திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து குணசேகரன் மீது மோதி, முள்வேலிக்குள் விழுந்தது. இதில் குணசேகரன் பலியாகினார். சோமநாதபுரம் போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

