/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மக்கள் நீதிமன்ற பணியிடத்திற்கு விண்ணப்பம்
/
மக்கள் நீதிமன்ற பணியிடத்திற்கு விண்ணப்பம்
ADDED : அக் 18, 2025 03:52 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பணியிடத்திற்கு பணி நியமனம் செய்ய பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
போக்குவரத்துத்துறை, தபால், தந்தி, தொலை தொடர்புத்துறை, மின்சாரத்துறை, மருத்துவத்துறை, காப்பீடு நிறுவனம், கல்வி நிறுவனம், வீட்டு வசதி போன்ற அரசுத் துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு இதழில் பதிவுபெற்ற அலுவலர் 62 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் பெயர், பாலினம், முகவரி, கல்வித்தகுதி, பணியின் விபரம், பணியில் சேர்ந்த நாள், பணி ஓய்வு பெற்ற நாள், பணியாற்றிய காலம் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பத்தை அக்.31 மாலை 5:45 மணிவரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சிவ கங்கை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.