sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மனைவி எரித்துக் கொலை ராணுவ வீரருக்கு ஆயுள்

/

மனைவி எரித்துக் கொலை ராணுவ வீரருக்கு ஆயுள்

மனைவி எரித்துக் கொலை ராணுவ வீரருக்கு ஆயுள்

மனைவி எரித்துக் கொலை ராணுவ வீரருக்கு ஆயுள்


ADDED : மார் 20, 2025 01:45 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை அருகே மனைவியை தீவைத்து கொலை செய்த ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கீழவளையம்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் 31. ராணுவத்தில் பணிபுரிகிறார். இவருக்கும் தேவகோட்டையை சேர்ந்த எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் மகள் ஸ்ரீவித்யா 27 என்பவருக்கும் 2014ல் திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது. செல்வக்குமார் வீடு கட்டுவதற்காக ஸ்ரீவித்யா பெற்றோரிடம் ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி தகராறு செய்துள்ளார்.

2017 டிச.8ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீவித்யா அணிந்திருந்த உடையில் செல்வக்குமார் தீ வைத்துள்ளார். இதில் காயமடைந்த ஸ்ரீவித்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். காளையார்கோவில் போலீசார் செல்வக்குமார் 31, அவரது தந்தை வேலுச்சாமி 58, தாயார் வள்ளி 52, அக்கா கோகிலா 30, உறவினர் சுதா 33 ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவகங்கை மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது வேலுச்சாமி இறந்தார். செல்வகுமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.21 ஆயிரம் அபராதமும், வள்ளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும், கோகிலாவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தும், சுதாவை விடுதலை செய்தும் நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் பிறழ்சாட்சியம் அளித்ததற்காக ஸ்ரீவித்யாவின் தந்தை எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us