ADDED : நவ 23, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை நகர் தி.மு.க., இலக்கிய அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். கொள்கை பரப்பு துணை செயலாளர் தமிழ்பிரியா, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் சிவமுத்துவளவன், மாநில துணைத் தலைவர் கவிதை பித்தன், முன்னாள் அமைச்சர் தென்னவன் 102 தமிழ் ஆசிரியர்களுக்கு விருது வழங்கினர். இலக்கிய அணி நிர்வாகிகள், தி.மு.க., கவுன்சிலர்கள், துணை அமைப்பாளர் அதியமான் பங்கேற்றனர்.

