sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு பேக்கரி ஊழியருக்கு 20 ஆண்டு சிறை

/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு பேக்கரி ஊழியருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு பேக்கரி ஊழியருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு பேக்கரி ஊழியருக்கு 20 ஆண்டு சிறை


ADDED : செப் 26, 2025 10:59 PM

Google News

ADDED : செப் 26, 2025 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிங்கம்புணரியில் 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் பேக்கரி ஊழியர் அஜித்குமாருக்கு 32, இருபது ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிங்கம்புணரி வடக்கு வளவில் உள்ள செட்டியார் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அங்குள்ள பேக்கரியில் பணிபுரிந்தார்.

2020 டிசம்பரில் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி பழகி வந்தார். அச்சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததில் சிறுமி கர்ப்பமானார்.

அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் சிங்கம்புணரி போலீசார் கைது செய்தனர். சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் வழக்கை விசாரித்தார். சிறுமி கடத்தலுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.500 அபராதம், சிறுமி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 5ஆண்டு சிறை, ரூ.500 அபராதம், பாலியல் தொல்லைக்கு 20 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், கர்ப்பம் அடைய செய்ததற்கு20 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் அஜித்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிறுமி உயிரிழந்ததால் அவரது பெற்றோருக்கு அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us