/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூடைப்பந்து போட்டி இன்று வீரர்கள் தேர்வு
/
கூடைப்பந்து போட்டி இன்று வீரர்கள் தேர்வு
ADDED : மே 27, 2025 12:51 AM
சிவகங்கை: மாநில கூடைபந்து போட்டியில் கலந்து கொள்ள சிவகங்கையில் இன்று (மே 27) வீரர்கள் தேர்வு நடக்கிறது என சிவகங்கை கூடைப்பந்து கழக மாவட்ட தலைவர் ஆர்.மகேஷ் துரை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சென்னை காட்டாங்குளத்துார் எஸ்.ஆர்.எம்.,அறிவியல் தொழில்நுட்ப கல்லுாரியில் ஜூன் 2 முதல் 10 ம் தேதி வரை தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான இளையோர் (18 வயதிற்கு உட்பட்டோர்) ஆண், பெண் பிரிவுக்கான கூடைப்பந்து போட்டி நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்கான வீரர்கள் தேர்வு இன்று (மே 27) மதியம் 3:00 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் சேர மாணவ, மாணவிகள் ஜன., 2007க்கு பின் பிறந்திருக்க வேண்டும். பிறப்பு சான்று அவசியம். ஆதார் அட்டை நகலுடன் தேர்வில் பங்கேற்கலாம், என்றார்.