sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 விடுதிகளில் உணவு முறைகேட்டை தடுக்க பயோமெட்ரிக் பொருத்தும் பணி துவக்கம்

/

 விடுதிகளில் உணவு முறைகேட்டை தடுக்க பயோமெட்ரிக் பொருத்தும் பணி துவக்கம்

 விடுதிகளில் உணவு முறைகேட்டை தடுக்க பயோமெட்ரிக் பொருத்தும் பணி துவக்கம்

 விடுதிகளில் உணவு முறைகேட்டை தடுக்க பயோமெட்ரிக் பொருத்தும் பணி துவக்கம்


ADDED : நவ 22, 2025 03:03 AM

Google News

ADDED : நவ 22, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு சமூகநீதி மாணவ மாணவியர் விடுதிகளில், முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் கருவி பொருத்தும் பணி நடந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவ, மாணவியர் விடுதிகள் உள்ளன. விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை முறைகேடாக காட்டுவது, கூடுதல் உணவு தொகை பெற்று முறைகேடு செய்வது உள்ளிட்ட புகார் எழுந்தது.

முதற்கட்டமாக ஆதி திராவிட நலத்துறை விடுதிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் உட்பட அனைத்து பள்ளி கல்லூரி சமூகநீதி விடுதிகளில், பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் தற்போது தொடங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 42 பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தும் பணி நடந்து வருகிறது.

அதிகாரிகள் கூறுகையில்: பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. விடுதிகளில் உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையில் பல்வேறு குழப்பம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது.

இதனை முதலில் கண்டறியவே பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் கைரேகை, முகப்பதிவு மூலம் பதிவு செய்யப்படும். தொடர்ந்து, மாணவர்கள், பணியாளர்கள் வருகைப் பதிவும் பயன்பாட்டிற்கு வரலாம்.






      Dinamalar
      Follow us