sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனம் பகுதியில் இரை தேடி வந்த பறவைகள்

/

திருப்புவனம் பகுதியில் இரை தேடி வந்த பறவைகள்

திருப்புவனம் பகுதியில் இரை தேடி வந்த பறவைகள்

திருப்புவனம் பகுதியில் இரை தேடி வந்த பறவைகள்


ADDED : நவ 04, 2024 07:09 AM

Google News

ADDED : நவ 04, 2024 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம், : திருப்புவனம் பகுதியில் விவசாய பணிகள் நடந்து வரும் நிலையில் வயல்களில் உள்ள புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் படையெடுத்து வருகின்றன.

திருப்புவனம் வட்டாரத்தில் சமீபத்திய மழையை நம்பி விவசாய பணிகள் தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் மாத கடைசியில் நெல் விவசாய பணிகள் தொடங்குவது வழக்கம் வடகிழக்கு பருவமழை பெய்யாததால் விவசாயிகள் நெல் விவசாய பணிகளை தொடங்கவில்லை.

தற்போது மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் நிலங்களில் உழவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் பிரமனூர், மேலவெள்ளுர், இலந்தைகுளம், கீழடி, பசியாபுரம், ஏனாதி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதி கண்மாய்களில் தண்ணீர் நிரம்பிய வண்ணம் உள்ளது. எனவே வெள்ளை கொக்கு, கருப்பு நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் கூட்டம் கூட்டமாக கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களில் கூடு கட்டி வருகின்றன.

பகலில் விவசாய நிலங்களில் டிராக்டர், உழவு மாடுகள் மூலம் உழவு பணிகள் நடைபெறுவதால் பறவைகள் வயல்களில் உள்ள புழு, பூச்சிகளை உண்ண கூட்டம் கூட்டமாக வருகின்றன. பகலில் வயல்வெளிகளில் மேயும் பறவைகள் இரவில் கண்மாயினுள் கட்டியுள்ள கூடுகளுக்கு பறந்து சென்று வருகின்றன.

விவசாயிகள் கூறியதாவது: விவசாய பணிகள் நடப்பதால் வயல்களில் கிடைக்கும் உணவை உண்ணுவதற்காக, ஏராளமான பறவைகள் கண்மாய்களில் உள்ள சீமை கருவேல மரங்களில் கூடுகட்டி வசிக்கின்றன.

வெள்ளை கொக்கு, கருப்பு, செங்கால் நாரைகள் வந்துள்ளன. பறவைகளின் எச்சம் நெல் வயல்களில் விழுவதால், பயிர் விளைவதற்கு இயற்கை உரம் கிடைத்து வருவதால், பறவைகளை வரவேற்கிறோம், என்றனர்.






      Dinamalar
      Follow us