sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை கட்ட திட்டம்; வாரிய நிதி ரூ.20.50 கோடி ஒதுக்கீடு

/

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை கட்ட திட்டம்; வாரிய நிதி ரூ.20.50 கோடி ஒதுக்கீடு

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை கட்ட திட்டம்; வாரிய நிதி ரூ.20.50 கோடி ஒதுக்கீடு

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை கட்ட திட்டம்; வாரிய நிதி ரூ.20.50 கோடி ஒதுக்கீடு


ADDED : ஏப் 30, 2025 07:29 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.40 லட்சம் செலவில் ஓய்வு அறை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் 54 வகையான கட்டுமான பணிகளில் லட்சக்கணக்கான ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இந்த ஊழியர்கள் அன்றாடம் காலை ஒரு இடத்தில் கூடி, பணிகள் கிடைத்ததும் அக்கட்டட பணிகளுக்கு சென்று வருவர். ஒரே இடத்தில் கூடும் வகையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை கட்டும் நோக்கில், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாநகராட்சி, நகராட்சி மூலம் இருக்கைகள், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டிக்கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறையும் அமைய உள்ளது.

தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதியில் இருந்து தலா ரூ.40 லட்சம் செலவில் ஓய்வு அறை கட்ட முதற்கட்டமாக ரூ.20.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறை மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் கட்ட முடிவு செய்துள்ளோம். இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது என்றார்.






      Dinamalar
      Follow us