ADDED : ஜூலை 10, 2025 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருகே கீழவலையம்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
எம்.எல்.ஏ., செந்தில்நாதன் துவக்கி வைத்தார். சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெரிய மாட்டு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பிரிவில் 13 ஜோடி மாட்டு வண்டிகளும் பங்கேற்றன.
போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கும் அதை ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.