ADDED : பிப் 15, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாம் நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, தலைமையாசிரியர் அமிர்த வாணி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடந்த முகாமில் தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். அல்பென்டசோல் மாத்திரைகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி மாணவர்களுக்கு வழங்கினர்.