sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை

/

திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை

திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை

திருப்புவனத்தில் சி.பி.ஐ., விசாரணை


ADDED : ஜூலை 15, 2025 06:30 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக நேற்று சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் விசாரணையை துவக்கினர்.

நேற்று மாலை 5:00 மணிக்கு மடப்புரத்தில் சி.பி.ஐ., குழுவினர் விசாரணையை துவக்கினர். பொறுப்பு எஸ்.பி., சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி., சுகுமாறன், டி.எஸ்.பி., அமலஅட்வின் உள்ளிட்டோர் மடப்புரம் கோசாலையில் நடந்த விசாரணை குறித்து குழுவினரிடம் விளக்கினர். பிறகு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கோசாலை, உதவி ஆணையர் அலுவலகம், கோயில் வாகன பார்க்கிங், அஜித்குமாரை போலீசார் அழைத்து சென்று விசாரித்த இடங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையை நடத்திய பிறகு அவர்கள் மதுரை சென்றனர். இன்று இரண்டாவது நாளாக போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us