ADDED : ஜூலை 02, 2025 07:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன் கோயில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது.
சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன் கோயிலில் ஜூன் 17ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
முக்கிய திருவிழாவான பால்குட திருவிழா. அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், தீச்சட்டி, பறவைக்காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. சாக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.