நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை எஸ்.ஐ., செல்வபிரபு சுற்றுச்சாலையில் ரோந்து சென்றார். தென்னளிவயல் அருகே 17 வயது சிறுவர்கள் 3 பேர் கையில் வாளுடன் ரோட்டில் சென்றவர்களை மிரட்டினர். அவர்களை ரோந்து சென்ற போலீசார் எச்சரித்து வாளை பறிக்க முயற்சித்தனர். போலீசாரை அவர்கள் மிரட்டினர்.
3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த வாள் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.

