ADDED : ஏப் 01, 2025 06:21 AM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் மாவட்ட கருவூலம் எதிரே உள்ள டூவீலர் ஸ்டாண்ட் கூரை அடிக்கடி கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் வாகனங்களை நிறுத்த அரசு அலுவலர்கள் அச்சப்படுகின்றனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் கட்டடம் கட்டி 40 ஆண்டு கடந்துவிட்டது. இந்த வளாகத்தில் எஸ்.பி., அலுவலகம்,பொதுப்பணித்துறை அலுவலகம், பள்ளிகல்வி துறை, மாவட்ட கருவூலம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகிறது.
கட்டடம் கட்டும் போது ஒவ்வொரு அலுவலகத்திற்கு அருகிலும் டூவீலர் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டடங்களும் முழுவதும் சேதம் அடைந்ததுள்ளது.
மாவட்ட கருவூலம், கலெக்டர் அலுவுலகம் கட்டடத்தின் பின்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. அதேபோல் எதிரே உள்ள டூவீலர் ஸ்டாண்ட் கூரை காங்கிரீட் பெயர்ந்து அடிக்கடி திடீர் திடீரென்று விழுவதால் அரசு அலுவலர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த அச்சப்படுகின்றனர்.

