ADDED : ஜன 05, 2024 04:49 AM
தேவகோட்டை : இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல். கட்சி மாநில நிலைக்குழு கூட்டம் தேவகோட்டையில் நடந்தது.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தமிழ்நாடு பொறுப்பாளர் சங்கர் கூறியதாவது:
வரும் தேர்தலில் இந்தியா செல்லும் திசையை தீர்மானிக்கும் தேர்தலாக அமைய வேண்டி நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் இண்டியா கூட்டணி அமைத்து உள்ளோம். ஜன.26ல் தொடங்கி ஜன. 30 வரை நடக்க கூடிய நிகழ்வை மக்கள் உறுதி ஏற்பு இயக்கமாக நடத்த உள்ளோம். பிப் .1 ல் நடைபெறும் ஊர்வலம் பொதுக்கூட்டத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கண்டதேவி தேர் வெள்ளோட்டத்தை அரசே நடத்தினாலும் அனைத்து ஜாதியினரும் சேர்ந்தே தேர் இழுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 8 ம் தேதி நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரையும் ஒன்றாக வைத்து பேச வேண்டும் என்றார்.
மாநில செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட செயலாளர் சிம்சன், மற்றும் நிர்வாகிகள் நாராயணன், ரஞ்சித், சந்தனமேரி உடன் இருந்தனர்.