/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் நெருக்கடி சொந்த கட்டடமின்றி தவிப்பு
/
சிவகங்கை ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் நெருக்கடி சொந்த கட்டடமின்றி தவிப்பு
சிவகங்கை ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் நெருக்கடி சொந்த கட்டடமின்றி தவிப்பு
சிவகங்கை ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் நெருக்கடி சொந்த கட்டடமின்றி தவிப்பு
ADDED : ஜூன் 17, 2025 06:13 AM
சிவகங்கை; சிவகங்கையில் நகரில் வாடகை கட்டடத்தில் இயங்கும் ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கியும், சொந்த கட்டடம் கட்டுவதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
சிவகங்கையில் உள்ள ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தின் கீழ் சிவகங்கை, ராமநாதபுரத்தில் 1450 கோயில்கள் வரை உள்ளன. இக்கோயில்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை உண்டியல் வருவாய் கிடைக்கிறது.
இணை கமிஷனரின் கீழ் உதவி கமிஷனர்கள், செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், தொல்லியல் ஆய்வாளர், செயல் அலுவலர், ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். இவ்விரு மாவட்ட கோயில் நிர்வாகம் அனைத்தும், சிவகங்கை இணை கமிஷனர் அலுவலகத்தில் இருந்தே நடைபெறுகிறது.
மேலும் இணை, உதவி கமிஷனர் உட்பட 7 பேர் வாகனங்களை நிறுத்த போதிய இடமில்லை. இதனால், பல ஆண்டாக முத்துச்சாமி நகரில் உள்ள பழமையான வாடகை கட்டடத்தில் இணை கமிஷனர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்த கட்டடம் அலுவலர்களுக்கும், அவர்களது வாகனங்களை நிறுத்த இட நெருக்கடியாக இருந்து வருகிறது. இதனால், அலுவலர்கள் தனித்தனியாக அமர்ந்து வேலை செய்ய முடியாமல், நெருக்கடியில் தவிக்கின்றனர்.
இதனை தவிர்க்க, இணை கமிஷனர் அலுவலகத்திற்கென புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
50 சென்ட் இடம் வீணாகுது
ஹிந்து அறநிலைய அதிகாரிகள் கூறியதாவது:
சிவகங்கை ஹிந்து அறநிலைய இணை கமிஷனர் அலுவலகம் கட்ட, புதிய நீதிமன்றம் அருகே 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வசதியுடன் கூடிய அலுவலக கட்டடம் கட்ட, ரூ.4 கோடி வரை திட்டமதிப்பீடு தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம்.
அரசு நிதி ஒதுக்கீடு செய்தபின், புதிய நீதிமன்றம் அருகே இணை கமிஷனர்அலுவலகம் புதிதாக கட்டப்படும், என்றனர்.