/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆடி வெள்ளி மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்
/
ஆடி வெள்ளி மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 19, 2025 12:17 AM

திருப்புவனம்: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
கிராமப்புறங்களில் ஆடி சிறப்பாக கொண்டாடப்படும், ஆடியில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் ஒரு மணிக்கு உச்சி கால பூஜை நடந்தது. பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பக்தர்கள் வசதிக்காக தடுப்பு அமைத்து பக்தர்கள் வரிசையாக அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மடப்புரம் விலக்கில் இருந்து அரசு பஸ்கள் தவிர வேறு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்பட்டு உடனுக்குடன் தண்ணீர் நிரப்பபட்டது.