/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் பிள்ளையார்பட்டியில் திரண்ட பக்தர்கள்
/
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் பிள்ளையார்பட்டியில் திரண்ட பக்தர்கள்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் பிள்ளையார்பட்டியில் திரண்ட பக்தர்கள்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் பிள்ளையார்பட்டியில் திரண்ட பக்தர்கள்
ADDED : ஜன 02, 2026 05:30 AM
திருப்புத்துார்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நகரத்தார் கோயிலான இங்கு குடவரையில் தியான நிலையில் கற்பகவிநாயகர் அருள்பாலிக்கிறார். ஆங்கில புத்தாண்டான நேற்று கோயிலில் அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மார்கழி தமிழ் பூஜை நடந்து மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவர் சன்னதி அருகில் உற்ஸவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் துவங்கியது.
கார்த்திகை துவங்கியது முதல் சபரிமலை,பழநிக்கு விரதமிருந்து செல்லும் பக்தர்கள் விநாயகரை தரிசிக்க திரளாக வருகின்றனர்.இதனால் மதியம் கோயில் நடை சார்த்தப் படுவதில்லை. இரவு 8:00 மணி வரை பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்கின்றனர்.
நேற்று ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகமாக காணப்பட்டது. இதனால் கூடுதல் வரிசையில் பக்தர்கள் நின்று 3 மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. கோயில் அருகில் மண்டபங்களில் உணவு வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கோனாப்பட்டு அரு.ராமசாமி, அரிமளம் நா.கண்ணன் ஆகியோர் செய்தனர். 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

