sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் துவக்கம்

/

வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் துவக்கம்

வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் துவக்கம்

வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் துவக்கம்


ADDED : நவ 05, 2025 12:31 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக வாக்காளர்கள் வீடுகளில் ஓட்டுச்சாவடி அலுவலர் கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகிப்பதை கலெக்டர் பொற்கொடி ஆய்வு செய்தார்.

திருப்புத்துார் தொகுதியில் மொத்தம் 335 ஒட்டுச்சாவடிகள் உள்ளன. அதில் திருப்புத்துார் தாலுகாவில் 207 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. நேற்று காலை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் படிவங்களை வாக்காளர்களுக்கு கொடுக்கத் துவங்கினர்.

ஒரு வாக்காளருக்கு தலா 2 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டன. ஒரு படிவத்தை வாக்காளர் பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி அலுவலரிடம் கொடுக்க வேண்டும். மற்றொரு பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் ஓட்டுச்சாவடி அலுவலர் கையெழுத்திட்டு வாக்காளரிடம் வழங்க வேண்டும்.

இதற்காக 3 முறை வாக்காளரை ஓட்டுச்சாவடி அலுவலர் சந்திக்க வேண்டும்.

நேற்று மாலை வரை ஒரு ஓட்டுச்சாவடிக்கு 20 முதல் 50 வீடுகளில் வாக்காளர்களை அலுவலர்கள் சந்தித்தனர். அடுத்த நாட்களில் மேலும் வேகப்படுத்தப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

திருப்புத்துார் அருகே ஊர்குளத்தான்பட்டியில் படிவங்கள் வழங்கப்படுவதை கலெக்டர் பொற்கொடி,தாசில்தார் மாணிக்கவாசகம் ஆய்வு செய்தனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் படிவம் வினியோகிப்பதில் சிரமங்கள் உள்ளதா என்று கலெக்டர் விசாரித்தார்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் திருப்புத்துாரில் தனியார் மகாலில் நேற்று நடந்தது.






      Dinamalar
      Follow us