sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு வாரம் ஒரு முறை விநியோகத்தால் பாதிப்பு

/

சிவகங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு வாரம் ஒரு முறை விநியோகத்தால் பாதிப்பு

சிவகங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு வாரம் ஒரு முறை விநியோகத்தால் பாதிப்பு

சிவகங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு வாரம் ஒரு முறை விநியோகத்தால் பாதிப்பு


ADDED : மே 07, 2025 02:16 AM

Google News

ADDED : மே 07, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை நகரில் சில பகுதிகளில் வாரம் ஒரு முறை மட்டும் குடி தண்ணீர் வருவதால் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஒரு நபருக்கு தினசரி 90 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். நகராட்சியில் மருதுபாண்டியர் நகரில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டி, மதுரை ரோட்டில் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டி, காளவாசல் பகுதியில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டி, அம்பேத்கர் தெரு அருகே பரணி பூங்காவில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டி, இந்திரா நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டி உள்ளது.

இவற்றின் மூலம் நகரில் உள்ள அனைத்து மக்களுக்கும் நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

சிவகங்கை நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. நகராட்சிக்கு இடைக்காட்டூர் வைகை ஆறு மூலமும், திருச்சி காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக தண்ணீர் 3 நாட்களுக்கு ஒரு முறையும், 4 நாட்களுக்கு ஒரு முறையும் வாரத்திற்கு ஒரு முறையும் குறைந்த அளவே விநியோகம் செய்யப்படுகிறது.

கோடை ஆரம்பித்து விட்டதால் தண்ணீரின் தேவை அதிகமாகவே உள்ளது. கடந்த சில வாரங்களாக சிவகங்கை நகராட்சியில் சில பகுதிகளில் 3 நாளுக்கு ஒரு தடவையும் சில நேரங்களில் வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நகராட்சியின் சார்பில் தண்ணீர் வராததால் குடிதண்ணீர் கேன் 30 ரூபாய்க்கு வாங்கும் சூழல் உள்ளது.

நகராட்சி நிர்வாகம் கோடை துவங்கிய நிலையில் முறையாக தண்ணீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us