sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் கல்விக்கடன் முகாம்

/

சிவகங்கையில் கல்விக்கடன் முகாம்

சிவகங்கையில் கல்விக்கடன் முகாம்

சிவகங்கையில் கல்விக்கடன் முகாம்


ADDED : அக் 03, 2024 04:36 AM

Google News

ADDED : அக் 03, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்காக அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் அக்.5ல் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாக அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், அக்.5 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி கணக்கு பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லுாரியிலிருந்து பெறப்பட்ட போனோபைட் சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று, கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து கடன் ஆணை வழங்கப்படும். இக்கல்வி கடன் முகாமானது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியத்திலும் நடைபெறவுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்ககொள்ள வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us