sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 04, 2025 ,ஆவணி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

புல்வநாயகி அம்மன் கோயிலில்  ஆனி திருவிழா தேரோட்டம்  இன்று தீர்த்தவாரி உற்ஸவம்

/

புல்வநாயகி அம்மன் கோயிலில்  ஆனி திருவிழா தேரோட்டம்  இன்று தீர்த்தவாரி உற்ஸவம்

புல்வநாயகி அம்மன் கோயிலில்  ஆனி திருவிழா தேரோட்டம்  இன்று தீர்த்தவாரி உற்ஸவம்

புல்வநாயகி அம்மன் கோயிலில்  ஆனி திருவிழா தேரோட்டம்  இன்று தீர்த்தவாரி உற்ஸவம்


ADDED : ஜூலை 10, 2025 02:54 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் ஆனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயிலில் ஜூன் 30 அன்று கொடியேற்றத்துடன் ஆனி திருவிழா துவங்கியது. தினமும் காலை, இரவு அம்மன் யானை, சிம்மம், பூப்பல்லக்கு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். ஒன்பதாம் நாளை முன்னிட்டு ஜூலை 8 ம் தேதி மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் புல்வநாயகி அம்மன் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனை நடந்தது.

அன்று மாலை 5:45 மணிக்கு சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேர் நான்கு ரத வீதிகளை வலம் வந்து மாலை 6:15 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்ட விழாவில் நாட்டார், நகரத்தார் பங்கேற்றனர். கோயில் கண்காணிப்பாளர் வேல்முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தார். இன்று காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புல்வநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us