sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேவகோட்டையில் அதிகபட்சம் 50 மி.மீ., மழை   மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி   

/

தேவகோட்டையில் அதிகபட்சம் 50 மி.மீ., மழை   மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி   

தேவகோட்டையில் அதிகபட்சம் 50 மி.மீ., மழை   மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி   

தேவகோட்டையில் அதிகபட்சம் 50 மி.மீ., மழை   மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி   


ADDED : அக் 07, 2025 03:58 AM

Google News

ADDED : அக் 07, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மாவட்டத்தில் அதிக பட்சமாக தேவகோட்டையில் 50 மி.மீ., மழை பதிவானது. இங்கு ஏராளமான மரங்கள் சாய்ந்து சேதம் ஏற்படுத்தின.

மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் மாலை அனைத்து இடங்களிலும் நல்ல மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

விவசாயிகளும் மானாவாரியாக நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்டவற்றை பயிரிட முடியா மல் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் உஷ்ணத்தை தணிக்கும் விதமாகவும், மானாவாரி விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் நேற்று முன்தினம் மாவட்ட அளவில் நல்ல மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக தேவகோட்டையில் 50 மி.மீ., மழை பதிவானது. இங்கு பெய்த மழைக்கு வாரச்சந்தை வளாகத்தில் இருந்த மரங்கள் சாய்ந்து, கடைகளை சேதப்படுத்தின.

மானாமதுரை, இளையான்குடியில் 43, திருப்புவனத்தில் 40, சிவகங்கையில் 29, காளையார்கோவிலில் 16.60, திருப்புத்துாரில் 13.60, காரைக்குடியில் 8 மி.மீ., மழை பதிவானது.

இந்த மழைக்கு நேற்று முன்தினம் மரம் விழுந்ததில் தேவகோட்டையில் மீன்வியாபாரி பெண் உயிரிழந்தார். சந்தைக்கு வந்த 5 பேர் காயமுற்றனர். வீடுகள் சேத மாகவில்லை. கால்நடைகள் இறப்பு ஏதும் இல்லை என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us