/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சொட்டுநீர் பாசனத்திற்கு விவசாயிகளுக்கு அழைப்பு
/
சொட்டுநீர் பாசனத்திற்கு விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : அக் 31, 2025 11:29 PM
மானாமதுரை: மானாமதுரை வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களான பழங்கள்,காய்கறிகள், மலர்கள் மற்றும் தானிய பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
சொட்டு நீர் பாசனத்தின் மூலம் வேலை ஆட்கள் கூலி குறையும்,களை வளர்வது தடுக்கப்படுகிறது, பூச்சி மற்றும் நோய் பரவலை தடுக்கலாம் மற்றும் 40 சதவீத நீரை சேமிக்கலாம்.
இதற்காக மானாமதுரை வட்டாரத்திற்கு நடப்பு ஆண்டில் 132 எக்டேர் பரப்பளவிற்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறுகுறு விவசாயிகள் 0.50 ஏக்கர் முதல் அதிகபட்சமாக 50 ஏக்கர் வரை சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம். இதர விவசாயிகள் அதிகபட்சமாக 12.50 ஏக்கர் வரை சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
மேலும் சொட்டுநீர் பாசன திட்டத்தை செயல்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தானியங்கி பாசன முறை அமைத்திடவும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிற இத்திட்டத்தில் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரமும், டீசல் மோட்டார் அல்லது மின்மோட்டார் அமைத்திட ரூ.15 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா அடங்கல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தாசில்தாரிடம் பெறப்பட்ட சிறுகுறு விவசாயி சான்று, மண் நீர் பரிசோதனை அட்டை வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது மானாமதுரை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து சொட்டு நீர் பாசனம் அமைக்க பெயரை பதிவு செய்து பயன் பெறலாம் என மானாமதுரை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

