sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கால்வாயில் குப்பை தேக்கம்

/

கால்வாயில் குப்பை தேக்கம்

கால்வாயில் குப்பை தேக்கம்

கால்வாயில் குப்பை தேக்கம்


ADDED : மே 25, 2025 11:07 PM

Google News

ADDED : மே 25, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மறவமங்கலம் பகுதிக்கு பெரியார் தண்ணீர் செல்வதற்காக முன்னாள் அமைச்சர் கண்ணப்பனாள் கால்வாய் கட்டப்பட்டது.

இந்த கால்வாயில் 2018இல் அ.தி.மு.க., ஆட்சியில் சிவகங்கை தெப்குளத்திற்கு தண்ணீர் கொண்டுவந்து நிரப்பப்பட்டது. இந்த கால்வாய் மேலுார் பகுதியில் துவங்கி சிவகங்கை நகரின் வழியாக மறவமங்கலம் பகுதிக்கு செல்கிறது. இந்த கால்வாய் செல்லும் பகுதியில் ரோஸ் நகர், அழகு மெய்ஞானபுரம், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதி நகரின் மிக அருகாமையில் உள்ளது. இப்பகுதியில் குப்பைகளை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை.

எனவே இந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை மருந்து குடோன் அருகில் செல்லக்கூடிய பெரியார் கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us