ADDED : மார் 29, 2025 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களும் 150-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
மாநகராட்சியில் தள்ளு வண்டி மூலம் குப்பை சேகரித்து வந்த நிலையில், தற்போது, தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் உள்ளது.
இந்நிலையில் நேற்று, பேட்டரி வாகனத்தில் சார்ஜ் போடும்போது திடீரென்று புகை வந்து தீப்பிடித்தது.
இதைப் பார்த்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.