sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கூட்டுறவு வங்கிகள் மூலம் '‛கவசம்' காப்பீடு திட்டம் அரசு செயல்படுத்த முடிவு

/

கூட்டுறவு வங்கிகள் மூலம் '‛கவசம்' காப்பீடு திட்டம் அரசு செயல்படுத்த முடிவு

கூட்டுறவு வங்கிகள் மூலம் '‛கவசம்' காப்பீடு திட்டம் அரசு செயல்படுத்த முடிவு

கூட்டுறவு வங்கிகள் மூலம் '‛கவசம்' காப்பீடு திட்டம் அரசு செயல்படுத்த முடிவு


ADDED : பிப் 01, 2025 02:04 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:தமிழக கூட்டுறவு வங்கிகளில் கவசம்' என்ற பெயரில் ஆயுள், சொத்து காப்பீடு திட்டத்தை அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் கீழ் 51 கிளைகள், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 932 கிளைகள், 4,532 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மகளிர் குழு, பொருளாதார மேம்பாட்டிற்கு கடன் வழங்கப்படுகிறது.

இந்த வங்கிகள் மூலம் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த 'கவசம்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய லைசென்ஸ் பெற்று நடத்தப்படும்.

இதற்காக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், இப்கோ டோக்கியோ, எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., லைப் இன்ஸ்ரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதன் மூலம் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் ஆயுள், பொது, மருத்துவம், பயணம், சொத்து, வணிகம், விபத்து காப்பீடு என பல் வேறு விதமான காப்பீடு திட்டங்களை குறைந்த காப்பீடு கட்டணத்தில் செயல்படுத்த உள்ளனர். கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் பெற்ற கடனுக்கு ஈடாக காப்பீடு செய்வதன் மூலம், வங்கிக்கான நிதி இழப்பு தவிர்க்கப்படும்.

குறிப்பாக நஷ்டத்தில் இயங்கும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தினால் வருவாய் பெற்று, வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை தர முடியும்.

இதனால் கூட்டுறவு வங்கிகள் நிதி சாரா வருமானத்தை ஈட்டமுடியும். இதற்கான பூர்வாங்க பணிகளை கூட்டுறவு வங்கிகளில் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us