sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேவரேந்தலில் உயர்மட்ட பாலம்: மக்கள் எதிர்பார்ப்பு

/

தேவரேந்தலில் உயர்மட்ட பாலம்: மக்கள் எதிர்பார்ப்பு

தேவரேந்தலில் உயர்மட்ட பாலம்: மக்கள் எதிர்பார்ப்பு

தேவரேந்தலில் உயர்மட்ட பாலம்: மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : டிச 21, 2024 07:43 AM

Google News

ADDED : டிச 21, 2024 07:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை அருகே தேவரேந்தலில் மாணவர்கள்,பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்ணீரை கடந்து செல்வதால் உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து இடது பிரதான கால்வாய் மூலம் மானாமதுரை அருகே உள்ள நெட்டூர் கண் மாய்க்கு தண்ணீர் சென்று அங்கிருந்து காக்குடி கண்மாய் நிரம்பி அதன் பிறகு இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.

இந்நிலையில் காக்குடி கண்மாய் கலுங்கை முறையாக பராமரிக்காததாலும் சேதமடைந்துள்ளதாலும் அதன் வழியாக வெளியேறும் தண்ணீர் ரோட்டை கடந்து வருகிறது.

இந்த ரோட்டில் தேவரேந்தல் பகுதியில் இருந்து மேலநெட்டூர் கிராமத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான முறையில பயணிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏதேனும் பலி ஏற்படுவதற்கு முன் மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us