sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆதார் மையத்தில் குவிந்த நுாறு நாள் திட்ட பணியாளர்கள்

/

ஆதார் மையத்தில் குவிந்த நுாறு நாள் திட்ட பணியாளர்கள்

ஆதார் மையத்தில் குவிந்த நுாறு நாள் திட்ட பணியாளர்கள்

ஆதார் மையத்தில் குவிந்த நுாறு நாள் திட்ட பணியாளர்கள்


ADDED : அக் 15, 2025 12:45 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்; திருப்புவனம் ஆதார் மையத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆதார் பதிவு செய்ய வந்தனர்.

தாலுகா அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தினசரி 50 முதல் 60 நபர்களுக்கு மட்டுமே ஆதார் பதிவு, திருத்தம் செய்ய முடியும்.

ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய இரண்டு பணியாளர்கள் இருப்பது வழக்கம். திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் ஒரே ஒரு பணியாளர் மட்டுமே இருப்பதால் பதிவு செய்ய தாமதமாகிறது.

100 நாள் திட்டத்தில் முறைகேடு அதிகளவில் நடப்பதால் இந்த திட்டத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் ஆதாரில் கண்விழி , கைரேகை உள்ளிட்டவற்றை மீண்டும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய வந்ததால் சிரமம் ஏற்பட்டது.

பொதுமக்கள் கூறுகையில்: திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே உள்ளார்.

சாதாரண நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது 100 நாள் திட்ட பணியாளர்களும் பதிவு செய்ய வருவதால் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் பணியாளர்கள் நியமித்து ஆதார் பதிவு செய்ய வேண்டும், என்றனர்.






      Dinamalar
      Follow us