sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மிளகாய், வெங்காயம் பயிருக்கு  ஜன. 31 க்குள் காப்பீடு செய்யவும்; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்  

/

மிளகாய், வெங்காயம் பயிருக்கு  ஜன. 31 க்குள் காப்பீடு செய்யவும்; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்  

மிளகாய், வெங்காயம் பயிருக்கு  ஜன. 31 க்குள் காப்பீடு செய்யவும்; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்  

மிளகாய், வெங்காயம் பயிருக்கு  ஜன. 31 க்குள் காப்பீடு செய்யவும்; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்  


ADDED : ஜன 14, 2025 10:35 PM

Google News

ADDED : ஜன 14, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; வாழை, வெங்காயம், மிளகாய் பயிர் காப்பீட்டிற்கான பிரீமிய தொகையை ஜன., 31 க்குள் செலுத்துமாறு கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, திருப்புவனம், மானாமதுரை விவசாயிகள் வாழை, வெங்காயம், மிளகாய் சாகுபடி செய்துள்ளனர்.

இப்பயிர்களை காப்பீடு செய்ய வாழைக்கு ஜன.,28, வெங்காயம், சிவப்பு மிளகாய்க்கு ஜன.,31க்குள் பிரீமிய தொகையை விவசாயிகள் அந்தந்த தேசிய வங்கி, தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், இ- சேவை மையங்கள் மூலம் செலுத்த வேண்டும்.

வாழைக்கு எக்டேருக்கு பிரீமிய தொகை ரூ.6,249.10 செலுத்தி காப்பீடு தொகை ரூ.1,24,982 பெறலாம்.

வெங்காயத்திற்கு ரூ.3,587.70 செலுத்தி, காப்பீடு தொகை ரூ.71,154, சிவப்பு மிளகாய்க்கு ரூ.1,878.45 செலுத்தி காப்பீடு தொகை ரூ.62,615 பெறலாம். பயிர் காப்பீடு செய்யும் போது பயிர் சாகுபடி செய்துள்ளதற்கான ஆதாரமாக அடங்கல், பட்டா நகல், விவசாயியின் ஆதார் கார்டு நகலை இணைக்க வேண்டும்.

விவசாயிகள் உரிய நேரத்திற்குள் பிரீமிய தொகையை செலுத்தி பயன்பெறலாம். மேலும் விபரம் அறிய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us