sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

'‛ஜல்ஜீவன்' திட்டம்: கலெக்டரிடம் புகார் 

/

'‛ஜல்ஜீவன்' திட்டம்: கலெக்டரிடம் புகார் 

'‛ஜல்ஜீவன்' திட்டம்: கலெக்டரிடம் புகார் 

'‛ஜல்ஜீவன்' திட்டம்: கலெக்டரிடம் புகார் 


ADDED : மார் 07, 2024 05:38 AM

Google News

ADDED : மார் 07, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்கு மாநில முதல்வர் படம் போட்டு நோட்டீஸ் வினியோகம் செய்வதாக, பா.ஜ.,வினர் சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளில் படிப்படியாக இத்திட்டம் மூலம் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் நிதி உதவியுடன், மக்கள் பங்களிப்பு தொகையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.

கிராமங்கள் தோறும் வழங்கப்படும் நோட்டீசில், ஜல்ஜீவன் திட்டத்தை தமிழக அரசு நிதியில் செயல்படுத்துவது போல், மக்களிடம் மாயை ஏற்படுத்தும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் படம் போட்டு, குடிநீர் திட்டம் குறித்த விளக்க நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதை கண்டித்து சிவகங்கை மாவட்ட பா.ஜ., தலைவர் சத்தியநாதன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, பொது செயலாளர் ஏ.நாகராஜன், ஓ.பி.சி., அணி மாநில செயற்குழு நாகேஸ்வரன், நகர் தலைவர் உதயா நேற்று மாலை சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.

கலெக்டர் ஆஷா அஜித், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.






      Dinamalar
      Follow us