/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோட்டையம்மன் ஆடி விழா ஜூலை 21 துவக்கம்
/
கோட்டையம்மன் ஆடி விழா ஜூலை 21 துவக்கம்
ADDED : ஜூலை 16, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா வரும் 21 ந்தேதி மாலை 6:00 மணியளவில் மேடை போடுதலுடன் தொடங்குகிறது.
மறுநாள் கோட்டையம்மனுக்கு காப்புக் கட்டப்பட்டு முதல் பொங்கலிட்டு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 14 தினங்கள் பீடத்திற்கு காலை மாலை இரு நேரமும் அபிஷேகங்கள் , ஆராதனை நடைபெறுகிறது.
25ந் தேதி பால்குடமும், மாலை பூத்தட்டு ஊர்வலமும் நடைபெறுகிறது. 29 ந்தேதி பகலில் புள்ளி பொங்கல் விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கானோர் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் அம்மனை வழிபடுவர்.