ADDED : பிப் 23, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள நம்பி நாகம்மாள் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக சில மாதங்களாக திருப்பணி நடைபெற்று வந்தன. பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின.
தொடர்ந்து 4 கால யாகசாலை பூஜை முடிந்து நேற்று காலை 10:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் கடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வலம் வந்தனர். புனித நீர் அடங்கிய கடங்களை நம்பி நாகம்மாள், சிவன், கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களின் சன்னதிகளின் கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று காலை 10:35 மணிக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.