ADDED : அக் 03, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: அரணையூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாமில் ஊராட்சி தலைவர் முனீஸ்வரி வரவேற்றார்.
முகாமில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் செயல்பாடுகள் மற்றும் சட்டப் பணிகள் குழுவை பொதுமக்கள் எவ்வாறு நாடி பயன் பெறுவது குறித்து வக்கீல் அமர்நாத் பேசினார்.
முகாமில் பொதுமக்கள்,ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஊராட்சி துணைத் தலைவர் கார்த்திகைச்சாமி நன்றி கூறினார். சட்டப்பணிகள் குழு இளவரசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.