/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தனியார் வங்கியில் கடன், ஏ.டி.எம்., மோசடி
/
தனியார் வங்கியில் கடன், ஏ.டி.எம்., மோசடி
ADDED : அக் 19, 2025 06:01 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் இருவரிடம் தனியார் வங்கியில் கடன் பெற்று தருவதாகவும், ஏ.டி.எம்., கார்டு மூலமாக ரூ.3 லட்சம் மோடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிங்கம்புணரி அருகே உள்ள தர்மப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதிதங்கவேல் 22. இவருக்கு கடந்த 12ம் தேதி தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் தருவதாக வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தது. அவரது போனுக்கு ஒருவர் பேசியுள்ளார். அவர் பேசியதை நம்பிய திருப்பதிதங்கவேல் அவர் கூறியபடி டாக்குமென்ட் சார்ஜ், கடன் பரிவர்த்தனை, இன்சூரன்ஸ் போன்ற பல காரணங்களுக்கு கீயூஆர் கோட் மூலமாக 16 தவணைகளாக ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 752 ரூபாய் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் கடன் கொடுக்காததாலும் அவரை தொடர்பு கொள்ள முடியாததாலும் திருப்பதி தங்கவேல் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
தேவகோட்டை சவேரியபட்டினம் ரவேல் 63. இவரது ஏடிஎம்., கார்டு தொலைந்து விட்டதாகவும்,அதிலிருந்து கடந்த 7ம் தேதி ரூ.57 ஆயிரம், 9ஆம் தேதி ரூ. ஒரு லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக ரவேல் நேற்று முன்தினம் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் இரண்டு புகார் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.