sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மதுரை-சூராணம் பஸ் நிறுத்தம்

/

மதுரை-சூராணம் பஸ் நிறுத்தம்

மதுரை-சூராணம் பஸ் நிறுத்தம்

மதுரை-சூராணம் பஸ் நிறுத்தம்


ADDED : ஜூலை 15, 2025 03:36 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மதுரையில் இருந்து சூராணம் வரை சென்ற அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் பஸ் வசதியின்றி சிரமப்படுகின்றனர்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரையில் இருந்து தினமும் மாலை 6:45 மணிக்கு புறப்படும் பஸ், சிவகங்கை, காளையார்கோவில், வேளாரேந்தல், இலந்தக்கரை, கோடிக்கரை வழியாக சூராணத்திற்கு இரவு 9:45 மணிக்கு சென்று சேரும்.

அங்கு இரவில் தங்கும்இந்த பஸ் மறுநாள் காலை 5:40 மணிக்கு சூராணத்தில் புறப்பட்டு வேளாரேந்தல் வழியாக சாத்தரசன்கோட்டை, சிவகங்கை வழியாக மதுரைக்கு சென்று சேரும்.

இந்த பஸ் மூலம் காளையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கோடிக்கரை, இலந்தக்கரை, வேளோரந்தல் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிவகங்கை, காளையார்கோவில், மதுரைக்கு சென்று வர ஏதுவாக அமைந்திருந்தது.

இந்நிலையில் தார்ரோடு பணிக்காக நிறுத்தப்பட்ட இந்த பஸ்சை ரோடு பணி முடிந்து பல மாதங்களாகியும், மீண்டும் இயக்காமல்உள்ளனர். அரசு போக்குவரத்து கழக நிர்வாகம்மதுரை -- சூராணம் இடையே மீண்டும் பஸ் இயக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us