sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 5 மாதம் சம்பளம் இல்லை

/

 கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 5 மாதம் சம்பளம் இல்லை

 கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 5 மாதம் சம்பளம் இல்லை

 கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 5 மாதம் சம்பளம் இல்லை


ADDED : டிச 24, 2025 05:32 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு சம்பள பாக்கியால் பணியாளர்கள் அவதிப்படுகின்றனர்.

தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளிலும் கொசுப்புழு ஒழிப்பு பணிக்காக 20 பேர் வேலை பார்த்து வருகின்றனர். நாள் ஒன்றிற்கு ரூ .523 சம்பளமாக வழங்கப்படுகிறது.

கடந்த ஜூன் முதல் சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. கொசு புழு ஒழிப்பு பணியாளர் சங்கம் சார்பில் முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டர், திட்ட இயக்குநர் ஆகியோரிடம் முறையிட்டனர். கலெக்டர் சம்பள பாக்கியை உடன் வழங்க உத்தரவிட்டார். ஒன்றிய அதிகாரிகள் ஜூன், ஜூலை மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கினர்.

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை சம்பளம் வழங்கவில்லை. வேறு எந்தவித வருமானம் இன்றி இவர்கள் நான்கு மாதங்கள் சம்பளம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

ஒன்றியத்தில் சம்பளம் போட நிதி இல்லை எனவும், 2026 ஏப்ரலில் தான் சம்பளம் கிடைக்கும் என அதிகாரிகள் கூறிய பதிலை தொடர்ந்து பணியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us