sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் முஸ்லிம்கள் மறியல்

/

சிவகங்கையில் முஸ்லிம்கள் மறியல்

சிவகங்கையில் முஸ்லிம்கள் மறியல்

சிவகங்கையில் முஸ்லிம்கள் மறியல்


ADDED : நவ 08, 2025 01:27 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தொடர் கொலை, வழிப்பறி சம்பவங்களை தடுக்கத்தவறிய போலீசை கண்டித்து சிவகங்கையில் முஸ்லிம்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கையில் நவ.,1ம் தேதி இரவு ராஜேஷ் என்ற இளைஞரை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. நவ., 2ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நேருபஜாரில் டீ சாப்பிட வந்த கறிக் கடைக்காரர் ஒலிமுகமது 31,- வைசிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் காயமுற்ற அவர் மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒலி முகமதுவை வெட்டியவர்களை கைது செய்ய வேண்டும். தொடர்ந்து மாவட்ட அளவில் நடந்துவரும் கொலை, வழிப்பறி சம்பவங்களை தடுக்க தவறிய போலீசை கண்டித்து நேற்று மதியம் 1:45 மணிக்கு சிவகங்கை முஸ்லிம்கள் அரண்மனை வாசலில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் சிவகங்கை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பேச்சு வார்த்தை நடத்தி, சில நாட்களுக்குள் அவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தார். தொடர்ந்து மதியம் 2:45 மணி வரை மறியல் மற்றும் போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டமும் செய்தனர். போலீசார் அளித்த உறுதியை அடுத்து மறியலை கைவிட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us