sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மார்ச் 28ல் பங்குனி பொங்கல் விழா

/

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மார்ச் 28ல் பங்குனி பொங்கல் விழா

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மார்ச் 28ல் பங்குனி பொங்கல் விழா

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மார்ச் 28ல் பங்குனி பொங்கல் விழா


ADDED : மார் 17, 2024 12:48 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 28ம் தேதி இரவு 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனிபொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

விழாவின்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தீச்சட்டி,கரும்பாலை தொட்டில், ஆயிரங்கண் பானை, முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுஉள்ளனர்.

இந்தாண்டிற்கான திருவிழா மார்ச் 28ம் தேதி இரவு 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா வருகிற ஏப்.4ம் தேதி நடைபெற உள்ளது.

மறுநாள் 5ம் தேதி இரவு 7:10 மணிக்கு மின் அலங்கார தேரோட்டம் நடைபெற உள்ளது.6ம் தேதி காலை 7:40 மணிக்கு பால்குடம் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம் நிகழ்ச்சியும் இரவு 10:00 மணிக்கு புஷ்ப பல்லக்கும் நடைபெற உள்ளது.7ம் தேதி கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us