sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பென்ஷனர்கள் தபால்காரரிடம்  உயிர் வாழ்சான்று பெறலாம்  கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

/

பென்ஷனர்கள் தபால்காரரிடம்  உயிர் வாழ்சான்று பெறலாம்  கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

பென்ஷனர்கள் தபால்காரரிடம்  உயிர் வாழ்சான்று பெறலாம்  கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

பென்ஷனர்கள் தபால்காரரிடம்  உயிர் வாழ்சான்று பெறலாம்  கோட்ட கண்காணிப்பாளர் தகவல்


ADDED : அக் 25, 2025 04:18 AM

Google News

ADDED : அக் 25, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: ராணுவம், மத்திய, மாநில அரசு, இ.பி.எப்., பென்ஷனர்களுக்கு தபால்காரர்கள் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று வீடு தேடி வரும் என சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: வீட்டில் இருந்த படியே தபால்காரர்கள் மூலம் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி பென்ஷனர்களுக்கு டிஜிட்டல் உயிர் வாழ்சான்று வழங்கப்பட உள்ளது. இதற்கு சேவை கட்டணம் ரூ.70யை தபால்காரரிடம் செலுத்த வேண்டும். பென்ஷனர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், அலைபேசி எண், பி.பி.ஓ., எண் மற்றும் பென்ஷன் கணக்கு புத்தக எண் விபரங்களை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர் வாழ் சான்று வழங்கப்படும்.

கடந்த ஆண்டு இந்த முறையில் அதிகளவில் பென்ஷனர்கள் உயிர் வாழ் சான்றினை பெற்றுள்ளனர். மேலும் தபால் துறை மூலம் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி சேவைகளை நாடு முழுவதும் 1.36 லட்சம் தபால் நிலையங்களுக்கு விரிவுபடுத்தி, 10 கோடி பேருக்கு சேமிப்பு கணக்கு துவக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உயிர் வாழ் சான்று பெற நவ., 1 முதல் சிறப்பு முகாம்கள் தபால் நிலையங்களில் நடைபெறும் என்றார்.






      Dinamalar
      Follow us